Saturday 9 March 2013

போலீஸ் நண்பர்கள் குழுவில் 25 பேர் சேர்ப்பு





பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2013,02:09 IST

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை போலீஸ் நண்பர்கள் குழுவில், புதிதாக, 25 வாலிபர்கள் சேர்க்கப்பட்டனர்.இதற்கான துவக்க விழா நேற்று முன்தினம், டி.எஸ்.பி., பாரதி தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வரவேற்றார்.இதில், ஊத்துக்கோட்டை போந்தவாக்கம், உப்பரபாளையம், பேரிட்டிவாக்கம், காசிரெட்டிபேட்டை ஆகிய கிராமங்களில் இருந்து, 25 வாலிபர்கள் சேர்ந்தனர்.இதுகுறித்து, டி.எஸ்.பி., பாரதி கூறுகையில், ""புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் போக்குவரத்து நெரிசல், கோவில் திருவிழா போன்றவற்றில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள், அந்தந்த பகுதிகளில் வெளிநபர் நடமாட்டம் ஆகியவற்றை போலீசுக்கு தெரிவிக்க வேண்டும்,'' என்றார்