Tuesday 17 September 2013

மோசடி நிதி நிறுவனங்களில் அரசு சின்னம்: ஏ.டி.ஜி.பி., அறிவுரை







" மோசடி நிதி நிறுவனம் நடத்துவோர், இரட்டிப்பு பணம் தருவதாக கூறி, "நோட்டீஸ்' களில், அரசு சின்னத்தை அச்சடித்து, கொடுத்து வருகின்றனர். இதை நம்பி, பொதுமக்கள் ஏமாற வேண்டாம்,'' என, பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி., பிரதீப் வி. பிலிப் கேட்டு கொண்டுள்ளார்.

நிதி நிறுவனங்கள் மோசடி குறித்து, ஏ.டி.ஜி.பி., பிரதீப் வி. பிலிப், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை வருமாறு: போலி நிதி நிறுவனங்கள், இந்திய கார்ப்பரேட் துறையின் கீழ் செயல்படும், நிறுவன பதிவாளரிடம் பதிவு செய்யாமல், பொது மக்களை கவரும் வகையில், "நோட்டீஸ்' களில், தமிழக அரசின் சின்னத்தை, பயன்படுத்துகின்றனர். பொதுமக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், அரசு வங்கி, எல்.ஐ.சி அலுவலகம் அருகே நடத்துகின்றனர். முறையான நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் படி, 12. 5 சதவீத வட்டி மட்டுமே வழங்க முடியும். ஆனால் இவர்களோ, ஒரே ஆண்டில், செலுத்திய தொகையை விட, 2 மடங்கு கூடுதல் தொகை தருகிறோம் என, பொய் வாக்குறுதிகள் தருகின்றனர். இவர்களது விளம்பர போர்டு முறையாக இருக்காது. வாய்மொழி உத்தரவாதங்களே அதிகம் இருக்கும். பதிவாளர், வருமான வரித்துறையிடம் ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்வது இல்லை. இப்படிபட்ட நிதி நிறுவனங்களில், பொது மக்கள் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்,'' என, குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவும் "போலீஸ் நண்பர்கள் குழு'வை களமிறக்கியது போலி நிதி நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி




காவல் நண்பர்கள் குழு மூலம், மோசடி நிதி மற்றும் சீட்டு நிறுவனங்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் பணத்தை காப்பாற்றும் புதிய திட்டத்தை, பொருளாதார குற்றப்பிரிவு துவக்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே, நிதி மற்றும் சீட்டு நிறுவனங்களை துவங்கி, உரிய துறையில் அனுமதி பெறாமலும், அங்கீகாரம் இல்லாமலும், பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து, மக்கள் சேமிப்பை தனதாக்கிக் கொள்ளும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.நாள் தோறும், மாநகர கமிஷனரகங்களிலும், மாவட்ட எஸ்.பி.,க்களிடமும் வரும் புகார்களே இதற்கு சாட்சி.

புகாரில் குறிப்பிட்ட தொகை அல்லது புகார்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட போலீஸ் கமிஷனரகத்தில் செயல்படும் மத்தியகுற்றப்பிரிவோ, அல்லது மாவட்ட எஸ்.பி., அலுவலகங்களில் செயல்படும், மாவட்ட குற்றப்பிரிவு விசாரிக்கும்.புகார்தாரர்கள் எண்ணிக்கையும்,மோசடி செய்யப்பட்ட முதலீட்டுத் தொகை அதிகரிக்கும் பட்சத்தில், பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்படுகிறது.

மாவட்டம் தோறும் செயல்பட்டு வரும் பொருளாதார குற்றப்பிரிவு, இந்த குற்றங்கள் குறித்து விசாரித்து, மோசடி நிறுவனங்களின் சொத்தை முறைப்படி ஏலம் விட்டு, முதலீட்டாளர்களுக்கு பணம் வழங்கி வருகிறது. என்னதான் சீட்டு மோசடி, நிதி நிறுவன மோசடி என பத்திரிகை மற்றும், "டிவி'க்களில் செய்தி வந்தாலும், இன்னும் ஏமாறுபவர்களும், மோசடி நிறுவனங்களும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்நிலையில், மோசடி நிறுவனங்களை கண்டுபிடிக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும், பொருளாதார குற்றப்பிரிவில், தனியாக " போலீஸ் நண்பர்கள் குழு' அமைக்க, பொருளாதார குற்றப்பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., பிரதீப் வி பிலிப் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநிலம் முழுவதும், அந்தந்த பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவின் முயற்சியில், விருப்பமுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், இளைஞர்கள் என, பலர் இணைந்துள்ளனர்.இவர்கள், அந்தந்த பகுதிகளில் அனுமதியின்றி சீட்டு மற்றும் நிதி நிறுவனங்கள் நடத்துபவர்கள், பங்குச் சந்தை முதலீடு என, அறிவிப்பவர்கள் குறித்த தகவலை பொருளாதார குற்றப்பிரிவிற்கு தெரிவிப்பர். அந்த தகவலின் அடிப்படையில், போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுப்பர்.

கடந்த, இரண்டு மாதங்களாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநிலம் முழுவதும் "போலீஸ் நண்பர்கள் குழு'வில் இணைந்தவர்களுக்கான முதல் கூட்டம், இம்மாதம், 4ம் தேதி நடந்தது. இக்கூட்டத்தில், கூடுதல் டி.ஜி.பி., பிரதீப் வி பிலிப், எஸ்.பி.,க்கள் ஆனி விஜயா, காமினி ஆகியோர் நண்பர்கள் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.
மேலும், பொருளாதார குற்றங்களை தடுக்க எடுக்க வேண்டிய முயற்சிகள், நிதி நிறுவனங்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பொதுமக்களும், காவல் நண்பர்களும் எளிதில் தகவல் தெரிவிக்கும் வகையில், "98405 84729' என்ற மொபைல் எண்ணும், "ஞுணிதீண்ஞிச்ட்ஞதண்tஞுணூ@ஞ்ட்ச்டிடூ.ஞிணிட், என்ற இ- மெயில் முகவரியும் அளிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டர், பேஸ்புக் மூலம், தமிழகம் முழுவதும், காவல் நண்பர்கள் குழுவினர் தெரியப்படுத்தி, பணத்தை இழந்தவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பதிவு செய்து முறையாக நடத்தும் நிதி நிறுவனங்கள், முறையற்ற நிதி நிறுவனங்களின், 25 குணாதிசயங்களும், வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வகையில், கடந்த இரண்டு மாதங்களில் அதிகளவில் தகவல்கள் பொருளாதார குற்றப்பிரிவுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் மீது போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

Saturday 9 March 2013

போலீஸ் நண்பர்கள் குழுவில் 25 பேர் சேர்ப்பு





பதிவு செய்த நாள் : பிப்ரவரி 27,2013,02:09 IST

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை போலீஸ் நண்பர்கள் குழுவில், புதிதாக, 25 வாலிபர்கள் சேர்க்கப்பட்டனர்.இதற்கான துவக்க விழா நேற்று முன்தினம், டி.எஸ்.பி., பாரதி தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வரவேற்றார்.இதில், ஊத்துக்கோட்டை போந்தவாக்கம், உப்பரபாளையம், பேரிட்டிவாக்கம், காசிரெட்டிபேட்டை ஆகிய கிராமங்களில் இருந்து, 25 வாலிபர்கள் சேர்ந்தனர்.இதுகுறித்து, டி.எஸ்.பி., பாரதி கூறுகையில், ""புதிதாக சேர்க்கப்பட்டவர்கள் போக்குவரத்து நெரிசல், கோவில் திருவிழா போன்றவற்றில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள், அந்தந்த பகுதிகளில் வெளிநபர் நடமாட்டம் ஆகியவற்றை போலீசுக்கு தெரிவிக்க வேண்டும்,'' என்றார்





Thursday 27 December 2012

பாதுகாப்பான தீபாவளி பயணத்திற்கு ரயில்களில் ஏற்பாடு: ஐ.ஜி. தகவல்





தினமலர் – வி, 8 நவ., 2012

சென்னை:பயணிகள் பாதுகாப்பான தீபாவளி பயணத்தை மேற்கொள்ளும் வகையில், ரயில் நிலையம் மற்றும் ரயில்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என, ரயில்வே ஐ.ஜி., ஆறுமுகம் தெரிவித்தார்.

ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு நிலை குறித்து, ரயில்வே ஐ.ஜி., ஆறுமுகம் கூறியதாவது:தீபாவளியையொட்டி, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருப்பூர், கோவை உட்பட, முக்கிய நிலையங்கள் அனைத்திலும்,போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்கள் ஒவ்வொன்றிலும்துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவர் உட்பட, மொத்தம் நான்கு போலீசார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இத்துடன், போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர்களும் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரலில், 50 பேரும், எழும்பூரில், 30 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ரயில்களில், விலை உயர்ந்த பொருட்கள் கொண்டு செல்லும் பயணிகள், பாதுகாப்பு கோரினால், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். ரயில் பாதைகளில் நாசவேலைகளில் ஈடுபட்டாலோ, ரயில்களில் பயணிகளின் உயிருக்கும், உடமைக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் நடந்த கொண்டாலோ, அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். ரயில்வே போலீஸ் உதவி மையத்தின் மொபைல் போனில் - 99625 00500 பயணிகள் அழைத்தால், தாமதமின்றி இணைப்பு கிடைக்கும் வகையில்,120 லைன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னையில், புறநகர் மின்சார ரயில்களில், தீபாவளியையொட்டி கூடுதல்பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலுக்கும், இரண்டு ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் இருவரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாறுவேடத்திலும் போலீசார்பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், புறநகர் மின்சார ரயில்களில், திருநங்கைகளால் தொந்தரவு ஏற்பட்டால், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க,போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, ஐ.ஜி., ஆறுமுகம் கூறினார்.



URL - http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3-%E0%AF%8D-163800550.html

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் நண்பர்கள் குழு சேவை சிறப்பாக உள்ளது போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி பேச்சு


திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவின் சேவை சிறப்பாக உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டடு முத்தரசி கூறினார்.
பயிற்சி நிறைவு விழா
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் காவ லர் மற்றும் காவல் நண்பர் களுக்கான பன்முனை பயிற்சி முகாம் நிறைவு விழா நடை பெற்றது. போலீஸ்துணை சூப்பிரண்டு குமரவேல் வர வேற்றார். போலீஸ் நண்பர்கள் குழு மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
சிறப்பாக உள்ளது
விழாவில் திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி கலந்து கொண்டு போலீஸ் நண்பர் கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்  மற்றும் சீருடைகள் வழங்கி பேசினார். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் துறையினருடன் இணைந்து இரவு ரோந்துபணி, தகவல் தரும்பணி, திருவிழா நேரங் களில் பாதுகாப்பு பணி மற்றும் மிக முக்கியமான பணிகளை போலீஸ் நண்பர்கள் குழுவி னர் செய்யும் போது எந்த ஒரு பிரதிபலனும் இன்றி சிறப்பாக சேவை பணியாற்றி வருகி றார்கள். இவர்களை காவல் துறை சார்பாக பாரட்டுகி றேன் என்றார்.
விழாவில் முதுநிலை பயிற்சி யாளர்கள் உமா மகேஸ்வரி, ஜான்ஜோசப்,  திருவண்ணா மலை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி, போலீஸ் நண்பர்களு குழு ஒருங்கிணைப்பாளர்கள் தியாகு, மேகராஜ்,  மதன்குமார், அன்பரசு, வந்தவாசி ஒருங்கி ணைப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். போலீஸ் நண்பர்கள் குழு மாவட்ட துணை ஒருங்கி ணைப்பாளர் கோபிநாத் நன்றி கூறினார்.




Monday 24 December 2012

காவல்துறைக்கு போலீஸ்-நண்பர்கள் குழு உதவியாக இருக்க வேண்டும்


Saturday 22 December 2012

துணை கமிஷனர் ஹேமா நினைவாக ஏழை தொழிலாளிக்கு மருத்துவ நிதியுதவி



பதிவு செய்த நேரம்:2012-11-09 10:16:31

கோவை,: சமீபத்தில் மரணம் அடைந்த துணை கமிஷனர் ஹேமா கருணாகரன் நினைவாக ஏழை தொழிலாளிக்கு மருத்துவ நிதியுதவி வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் நாகஜோதி. இவரது மகன் தீனலிங்கேஸ்வரன் (25). மெக்கானிக் தொழிலாளி. 
சமீபத்தில் இவர் சாலைவிபத்தில் படுகாயம் அடைந்தார். கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை செலவு ஒன்றரை லட்சம் ரூபாயை தொடும் என டாக்டர்கள் கூறிவிட்டன ர். ஏழை குடும்பமாக இருப்பதால் நிதி திரட்ட முடியாமல் சிரமப்பட்டனர். 
இதையறிந்த கோவை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் நிதியுதவி செய்ய முன்வந்தனர். சமீபத்தில் மரணம் அடைந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஹேமா கருணாகரன் நினைவாக ரூ.25 ஆயிரம் மருத்துவ நிதியுதவியை நேற்று வழங்கினர். இந்த தொகையை ஹேமா கருணாகரனின் கணவரும், கோவை மாவட்ட கலெக்டருமான கருணாகரன், தீனலிங்கேஸ்வரன் தாய் நாகஜோதியிடம் வழங்கினார்.
அப்போது, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், கிருஷ்ணன், சரண்யா, விஜயலட்சுமி, சுகுமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.



URL - http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=117480&cat=504