Thursday 27 December 2012

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் நண்பர்கள் குழு சேவை சிறப்பாக உள்ளது போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி பேச்சு


திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவின் சேவை சிறப்பாக உள்ளது என்று போலீஸ் சூப்பிரண்டடு முத்தரசி கூறினார்.
பயிற்சி நிறைவு விழா
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் காவ லர் மற்றும் காவல் நண்பர் களுக்கான பன்முனை பயிற்சி முகாம் நிறைவு விழா நடை பெற்றது. போலீஸ்துணை சூப்பிரண்டு குமரவேல் வர வேற்றார். போலீஸ் நண்பர்கள் குழு மாவட்ட ஒருங்கிணைப் பாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
சிறப்பாக உள்ளது
விழாவில் திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி கலந்து கொண்டு போலீஸ் நண்பர் கள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ்  மற்றும் சீருடைகள் வழங்கி பேசினார். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் துறையினருடன் இணைந்து இரவு ரோந்துபணி, தகவல் தரும்பணி, திருவிழா நேரங் களில் பாதுகாப்பு பணி மற்றும் மிக முக்கியமான பணிகளை போலீஸ் நண்பர்கள் குழுவி னர் செய்யும் போது எந்த ஒரு பிரதிபலனும் இன்றி சிறப்பாக சேவை பணியாற்றி வருகி றார்கள். இவர்களை காவல் துறை சார்பாக பாரட்டுகி றேன் என்றார்.
விழாவில் முதுநிலை பயிற்சி யாளர்கள் உமா மகேஸ்வரி, ஜான்ஜோசப்,  திருவண்ணா மலை தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி, போலீஸ் நண்பர்களு குழு ஒருங்கிணைப்பாளர்கள் தியாகு, மேகராஜ்,  மதன்குமார், அன்பரசு, வந்தவாசி ஒருங்கி ணைப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர். போலீஸ் நண்பர்கள் குழு மாவட்ட துணை ஒருங்கி ணைப்பாளர் கோபிநாத் நன்றி கூறினார்.




No comments:

Post a Comment