Saturday 22 December 2012

பாளையில் போலீஸ் நண்பர்கள் குழு அமைப்பினர் ஆலோசனை




சனி 15, டிசம்பர் 2012 5:52:27 PM 

பாளையங்கோட்டையில் போலீஸ் நண்பர்கள் குழு கூட்டம் நடந்தது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் அடிக்கடி வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால் போலீஸ் நண்பர்கள் குழு அமைக்கப்பட்டு பெருமாள்புரம் காவல் நிலையத்தில் முதல் கூட்டம் நடந்தது. 

உதவி கமிஷனர் ராஜமன்னார் கூட்டத்திற்கு தலைமை வகிக்க, இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.இதில் மாநகராட்சி கவுன்சிலர் டேனியல் ஆபிரகாம், நிர்வாகிகள் மற்றும் டாக்டர் பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது  மின்தடை நேரத்தில் நடக்கும் வழிப்பறி சம்பவங்களை தடுத்திட  கூடுதல் போலீசார் பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்ய வேண்டும் என போலீஸ் நண்பர்கள் குழு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர்.




No comments:

Post a Comment